Chinnapura Ondru (From "Anbe Sangeetha")

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோஓஓ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா
சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் உன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்

மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இன்று நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா
இல்லை சோகங்களா
சொல்லம்மா

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link