Kannan Oru (From "Bhadrakali")

கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை

கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மை விழியேதாலேலோ...
மாதவனே தாலேலோ

கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை

உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி

மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி

கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடும் என்று
பொட்டு ஒன்றுவைக்கட்டுமா

கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை

கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மை விழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராரிரோ...
ஆராராரிரோ...



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link