Kannukkul Yedho

கண்ணுக்குள் ஏதோ?, கண்ணுக்குள் ஏதோ?
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ?, நெஞ்சுக்குள் ஏதோ?
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே

உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண்ணே சொல் இது தான் காதல் என்பதா?

கண்ணுக்குள் ஏதோ?, கண்ணுக்குள் ஏதோ?
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
அஅ அஅஅ அஅஅ

காதல் வந்து
கெடுத்த பின்
கவிதைகள் படிக்கிறேன்
தோழிகளை தவிர்க்கிறேன்
உன்னை தேடி வருகிறேன்

தாய் தந்தை இருந்தும்
ஏன் தனிமையில் தவிக்கிறேன்?
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
எந்தன் வீட்டைச் சொந்தம் என்று
நேற்று வரை நினைத்தவள்
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்
உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன்

கண்ணுக்குள் ஏதோ?, கண்ணுக்குள் ஏதோ?
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
அஅ அஅஅ அஅஅ

கனவிலே
நீயும் வந்தால்
புகைப்படம் எடுக்கிறேன்
கனவுகள்
இங்கு இல்லை
கண் விழித்து நினைக்கிறேன்

பெண்ணே நானோ உன்னை என்றும்
மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
அன்பே நானோ இருக்கையில்
உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
உண்மை காதலில் சாதல் இல்லையடி

கண்ணுக்குள் ஏதோ?, கண்ணுக்குள் ஏதோ?
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ?, நெஞ்சுக்குள் ஏதோ?
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே

உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண்ணே சொல் இது தான் காதல் என்பதா?

ஹ்ம்ம்ம்ம் ஹஹஹஹா
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்



Credits
Writer(s): Na. Muthukumar, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link