Inayae (From "Thadam")

இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா இணையே

மையல் காதலாய் மாறிய
புள்ளி என்றோ மனம் கேட்குதே
காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்
எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி

யுகமாய் கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி
யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி

இணையே



Credits
Writer(s): Arun Raj, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link