Oru Jeevanthan - Happy

ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ
வேறாரும் நெருங்காமல்
மனவாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி ஹாஆஅஆஅ
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி ஹாஆஅஆஅ
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஹா... ஆஅ... ஆஅ... ஹா... ஆஅ... ஆஅ... ஹா... ஆஅ... ஆஅ

காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோ... ஹோ ஓ ஓ
ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ

வரும் நாளெல்லாம்
இனி மதனோற்சவம் ஹா... ஆஅ... ஆஅ
வளையோசைதான் நல்ல மணிமந்திரம் ஹா... ஆஅ... ஆஅ
நான்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா ஹஹஹா... நடுராத்திரி
சுதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்

ஒரு ஜீவன்தான் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
உன் பாடல்தான் ஹா... ஆஅஆ
ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது



Credits
Writer(s): Valee, Vijayananda
Lyrics powered by www.musixmatch.com

Link