Kannaana Kanney

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா

நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே...

புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகையை எரிந்தே
மீட்டாய் என்னை

விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்

போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே



Credits
Writer(s): Thamarai, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link