Kaadhal Rojave (From "Roja")

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா
சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்

வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ
பாவையில்லை பாவை
தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்



Credits
Writer(s): A. R. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link