Maanguyilae (Duet)

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

முத்து முத்து கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

காலைத் தழுவி நிக்கும்
கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு

உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு ஐயா
ஒன்னும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு

இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான் நல்ல கத தான்

தோல தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு
சம்மதத்தக் கூற

சந்தனங்கரச்சுப்
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட
அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு
பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு

கன்னி மனசு உன்ன நெனக்கும்
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்

கூரைப் பட்டுச் சேலை அம்மா கூட ஒரு மால
வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல
தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு
தேடுது மனசு பாடுது வயசு

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு



Credits
Writer(s): Gangai Amaran, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link