Idhudhaan En Kadhai

இதுதான் என் காதல் கதை
இனி மேல் நான் வாழும் வரையே
கதையில் நாம் மூவரும் இருக்க
அதில் நீதான் இதயத்தின் ராணி

அழகின் அழகே இதை கேளு
உன் நிழலாய் வாழும் நிஜம் நானே
செவி கேளா பாடல் ஒன்று இதயத்தின் இசையானதே
செவி கேளா பாடல் ஒன்று இதயத்தின் இசையானதே

மழையே நான் கண்ணீரில் மழையே
பிழையே நான் வாழ்தல் பிழையே
ஒரு பாலமாய் வந்தேன் நானே
பந்து வராலி ஆனேன் சகியே
காதல் செய்யவே வந்தேன் நானே
வரலாற்று கதையாய் ஆனேன்

கதையின் பாதை இருவழி தான் இருவழி தான்
அதில் ஒருவழி நான் ஒருவழி யார்
ஒரு சிறகில் பறவை பறக்குமா
அதுவே என் நிலை

இதுதான் என் கதை
இதுதான் என் கதை



Credits
Writer(s): A R Rahman, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link