Odu Odu Aadu

தந்தானே தானே நானே நா னே
தந்தானே தானே நானே நா னே
தாந்தானே தணி நாரி நானே
தநானே தணி நாரி நானே

வெளிச்சத்த திண்ணுது காடு (வெளிச்சத்த திண்ணுது காடு)
காட்ட திண்ணுது ஆடு (காட்ட திண்ணுது ஆடு)
ஆட்டை திண்ணுது புலி (ஆட்டை திண்ணுது புலி)
இதுதாண்டா பசி (இதுதாண்டா பசி)

புலிய திண்ணுது சாவு
சாவ திண்ணுது காலம்
காலத்த துண்ணுது காளி
இதுதான் மகா பசி

நிக்காம தொரத்தும் ஒண்ணு
அட சிக்காம பறக்கும் ஒண்ணு
மாட்டிட்டா இது செத்துச்சு
மாட்டாட்டி பசியில அது செத்துச்சி

ஒரு ஜீவனுக்கிங்கே பசி வந்தா
ஒரு ஜீவன் நிச்சயம் பலி தாண்டா

Hey ஓடு ஓடு ஆடு
புலி வந்தாக்கா அதிரும் காடு, ஓய்

மீனுக்கு புழுதான் வலை
பறவைக்கு தானிய வலை
நாய்க்கு எலும்பே வலை
மனுஷனுக்கென்றும் ஆசையே வலை

பன்னாரி அம்மன் கோயிலு
பலியா ஆடு கோழி கேக்குது
கத்தியும் ரத்தமும் பூசுது
சாமிக்கு தட்சணை கொடு வரம் தர
இதுதான் விதியின் யாத்திர

எளைச்சவன் பாடு திண்டாட்டம் இதுதான் உலகின் வேதம்
வலுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது காலம் சொல்லும் பாடம்
பசியின் முன்னே தெரியாது நீதி நியாயம்
பலம் இருக்கும் ஆளோட கையில் ராஜ்ஜியம்

Hey ஓடு ஓடு ஆடு
புலி வந்தாக்கா அதிரும் காடு ஓய்

அடங்கீ கெடந்தா தவறு (தவறு)
அடிச்சவன்தானே power'u (power'u)
ஒதைக்கிற வழிதான் பெருசு (பெருசு)
ஒதைக்கும் முன்னாடி உலகம் சிறுசு

தாக்குற ஆளு மேல
தயங்குற ஆளு கீழ
குத்துர கிடைக்கிற பாடம்
புத்தனும் கூட சொல்லலடா



Credits
Writer(s): Devi Sri Prasad, Siju Thuravoor
Lyrics powered by www.musixmatch.com

Link