Uyir Urugudhey

நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை

உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே
ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை

நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை

மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லா கதை
இன்பம் போல் தோன்றும் வதை

கண்டேன் என் மாயாவி மானை என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை

நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை

பாயும் உன் கார் கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீதான் தாங்கினாய்

ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நான் சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்

உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே
ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க மறந்து விட்டேன்
பாவை முன்னே முன்னே பனியாய் கரைந்து விட்டேன்

நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை



Credits
Writer(s): Thamarai Subramanian, R Rahman A
Lyrics powered by www.musixmatch.com

Link