Kanneer Sindha

கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே

ஓ-ஓ-ஓ, கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே

கால் ஓய்ந்து தோல் தேய்ந்து நான் சாய்கிறேன்
நீ என்னை தாலாட்டா
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி
உன் பிள்ளை நான் தானடா

ஓ-ஓ-ஓ, கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே

வானம் எங்கும் வர்ணஜாலம்
எந்தன் மனம் ஆடுதே
தேவதைகள் சேர்ந்து நின்று
என் பெயரை பாடுதே

நேற்று நான் நீ வந்த விதையட
இன்று நீ நான் தேடும் நிழலாட
ஏழு-ஏழு ஜென்மத்தின் தவத்திலே
இறைவன் தந்த வரமடா
உந்தன் மடி மட்டும் வேண்டும்
போகும் வரை இந்த அன்பே போதும்

கண்ணீர் சிந்த ஆனந்த பூவொன்று பூக்கின்றதே
பாரம் தாங்கி தளர்ந்த இதயம் கை வீசுதே

கால் ஓய்ந்து தோல் தேய்ந்து நான் சாய்கிறேன்
நீ என்னை தாலாட்ட டா
நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி
உன் பிள்ளை நான் தானடா



Credits
Writer(s): Anirudh Ravichander, Dhanush Kasthoori Raja
Lyrics powered by www.musixmatch.com

Link