Pookkal Yellam (From "The Blast")

ஹ... ஹ... ஹ

சிற்பிக்குள்ளே முத்தை யார் வைத்தார்?
பூவுக்குள்ளே தேன் வைத்தார், யாரோ?
பூமிக்குள்ளே காற்றை யார் வைத்தார்?
வானுக்குள்ளே மழை வைத்தார், யாரோ?

வாழ்க்கை என்பது
அர்த்தமானது
வாழ்ந்துப் பார்க்க வழி இங்கு பலவுண்டு
அழகு என்பது
இரவும் பகலும் ஓயாதது

சிற்பிக்குள்ளே முத்தை யார் வைத்தார்?
பூவுக்குள்ளே தேன் வைத்தார், யாரோ?
பூமிக்குள்ளே காற்றை யார் வைத்தார்?
வானுக்குள்ளே மழை வைத்தார், யாரோ?

எல்லாமே இப்போது சட்டங்கள்
வெறும் சட்டங்கள்
குண்டுகள் எரிந்து, கூரைகள் எரித்து
பென்டுப்பிள்ளை வையோதியரை கொண்டு குவிப்பது
யாருடைய பொழுது போக்கு?

இயற்கை என்பது
கவிதையானது
இறைவன் வரைந்த வண்ணங்கள் மாறாது
நிலவும் சரியுது
நிஜங்கள் என்றும் புரியாததே

பூக்கள் எல்லாம் யார் தந்தார்?
காற்றும் மழையும் யார் தந்தார்-ஒ?
இந்த இயற்கை எல்லாம் யார் தந்தார்?
நிலவும் கொடியும் யார் தந்தார்-ஓ?

வானம் அழைத்தது
பூமிச் சிரித்தது
உலகம் முழுதும் இன்பங்கள் பொங்காதோ?

சிற்பிக்குள்ளே முத்தை யார் வைத்தார்?
பூவுக்குள்ளே தேன் வைத்தார், யாரோ?
பூமிக்குள்ளே காற்றை யார் வைத்தார்?
வானுக்குள்ளே மழை வைத்தார், யாரோ?

வாழ்க்கை என்பது
அர்த்தமானது
வாழ்ந்துப் பார்க்க வழி இங்கு பலவுண்டு
அழகு என்பது
இரவும் பகலும் ஓயாதது

சிற்பிக்குள்ளே முத்தை யார் வைத்தார்?
பூவுக்குள்ளே தேன் வைத்தார், யாரோ?
பூமிக்குள்ளே காற்றை யார் வைத்தார்?
வானுக்குள்ளே மழை வைத்தார், யாரோ?



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Paarthi Bhaskar
Lyrics powered by www.musixmatch.com

Link