Aathadi Manasudhan

ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே

அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக விசும் காத்து
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே

அடடா இந்த மனசு தான்
சுத்திச் சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்தக் கொலுசு தான்
தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே

ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே

கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்டத்தட்ட கண்ணு வேர்த்துப் போகும்
மூச்சே காச்சலா மாறும்...
ஆஹா விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும்
மனசே மார்கழி மாசம்

அருகில் உந்தன் வாசம்
இந்தக் காத்தில் வீசுது
விழி தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது

பாவி நெஞ்ச என்ன செஞ்சே
உந்தன் பேர சொல்லிக் கொஞ்ச
அவளை கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வானடா

ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச தைரியம் இல்ல
ஆஹா உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டித் தள்ள
இருந்தும் வெட்கத்தில் செல்ல

காலம் எல்லாம் அவன
நீ பாத்தே வாழணும்
உயிர் போகும் நேரம் அவனின்
மடியில் சாய்ந்தே சாகணும்

ஒன்னத் தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்கத் தோணும்
நெஞ்சம் அவனோடு வாழாம
மண்ணோடு சாயாதடா



Credits
Writer(s): Yuvanshankar Raja, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link