Kaalangathale

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே...

உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்...
உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்...
என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி... ஓ ஓ ஓ ஓ ஓ

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே...

உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய்...
ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்...
கொலுவுமை போலிருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்...
அடிக்கடி நகம் கடிக்கிறாய்... என்னை மயக்கி மாயம் செய்தாய்...
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ... ஓ ஓ ஓ ஓ ஓ கோ

காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே...

பழசை மறைக்க நினைக்கும் உனக்கு நடிக்க வரவில்லயே...
உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லயே...
எதற்காக நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்...
அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்...
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி... ஓ ஓ ஓ ஓ ஓ கோ

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே...



Credits
Writer(s): Vivekanandan Munusamy, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link