O Baby

விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே
(விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே)
இரவு பகலாக இதயம் கிளியாகிப் பறந்ததே
(இரவு பகலாக இதயம் கிளியாகிப் பறந்ததே)
ஏ காதல் நெஞ்சே யாரோடு சொல்வேன்(ஏ காதல் நெஞ்சே)
வந்து போன தேவதை நெஞ்சை அள்ளிப் போனதே
நெஞ்சை அள்ளிப் போனதே

ஓ baby baby என் தேவ தேவி
ஓ baby baby என் காதல் ஜோதி

ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்
ஓ baby baby என் தேவ தேவி

பார்வை விழுந்ததும் உயிர்வரிகள் தேகம் நனைந்தது
ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது
நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை
காற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை
ஹோ இருதயம் இருபக்கம் துடிக்குதே
அலைவந்து அலைவந்து அடிக்குதே
எனக்குள்ளே தான்

ஓ baby baby என் தேவ தேவி
ஓ baby baby என் காதல் ஜோதி

ஜீவன் மலர்ந்தது புது சுகம் எங்கும் வளர்ந்தது
தெய்வம் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது
ஊரைக் கேட்கவில்லை பேரும் தேவையில்லை
காலம் தேசம் எல்லாம் காதல் பாணியில்லை
ஓ தேவதை தரிசனம் கிடைத்ததே
ஆலய மணி இங்கு ஒலித்ததே
என்னைத் தந்தேன்

ஓ baby baby என் தேவ தேவி
ஓ baby baby என் காதல் ஜோதி

ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே?
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்

ஓ baby baby என் தேவ தேவி
ஓ baby baby என் காதல் ஜோதி



Credits
Writer(s): Ilaiyaraaja, Palani Bharathi Palaniappan
Lyrics powered by www.musixmatch.com

Link