Kangal Neeye

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை
பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ
இசையாக பல பல ஓசை செய்திடும்
ராவணன் ஈடில்லா என் மகன்

ம்-ம்
ம்-ம்-ம்

எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்

போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ
பசி என்றால் தாய் இடம் தேடும்
மானிட மா்மம் நீ
நான் கொள்ளும் கா்வம் நீ

ஒ-ஒ
ஒ-ஒ-ஒ-ஒ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ



Credits
Writer(s): Thamarai, Prakash Kumar G V
Lyrics powered by www.musixmatch.com

Link