Yean Penendru

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய்
உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன்
கண்கள் பறித்தாய்

என் வலி தீர
ஒரு வழி என்ன
என் பனிப் பூவே மீண்டும்
பார்த்தால் என்ன

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

நீ சூடும்
ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால்
என் பேர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன்

தூக்கத்தை தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்
தலை போன
சேவல் போல்
தவிக்குது அங்கம்
இரண்டில் ஒன்று
சொல்லிவிடு
இல்லை நீயே கொள்ளியிடு

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

நோகாமல்
பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி
தொடுவேன்
என்ன ஆனாலும் உயிர்
போனாலும்
ஒரு தென்றல் என்றே வருவேன்

நீ என்னைப் பார்த்தால் தான்
துடிக்குது உள்ளம்
நீ என்னைப் பிரிந்தாலோ
உள்ளம் வெறும் பள்ளம்

இமயம் கேட்கும்
என் துடிப்பு
ஏனோ உனக்குள் கதவடைப்பு

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய்
உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன்
கண்கள் பறித்தாய்

என் வலி தீர
ஒரு வழி என்ன
என் பனிப் பூவே
மீண்டும் பார்த்தால் என்ன

ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்



Credits
Writer(s): Vasan
Lyrics powered by www.musixmatch.com

Link