En Ullil

என் உயிர்
என்னை விட்டு பிரிந்த பின்னே
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ ஒ

கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ
நீ என் உடலுக்குள் உயிரல்லவா
ஒரே உயிர் நாமல்லவோ
உடல் வாழவே ஓ உயிர் போகுமோ
இருதயம் தூளான பிறகு
இடிகளைத் தாங்காது பட்டுப்பூச்சி சிறகு
இனி எந்தன் வாழ்வே வீணோ
வெறுமையோ

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்தது என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன (2)

உன் கண்ணில் தானே நான் பார்த்துக் கொண்டேன்
கண்ணே போனால் நான் என்னக் காண்பேன்
உன் செவியில் தானே நான் ஒலிகள் கேட்டேன்
செவியே போனால் யார் பாடல் கேட்பேன்
கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க
காற்றுக்கு விரல் இல்லை கண்ணீரைத் துடைக்க
வாழ்வினை இழந்த பின் வாழ்வா ஓ நீ வா வா

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்தது என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன (2)

நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை
எங்கே உடையும் யார் சொல்லக் கூடும்
இலையோடு வழியும்
மழை நீரைப் போலே உடலோடு ஜீவன்
சொல்லாமல் போகும்
உயிரே நான் என்ன ஆவேன்
உணர்வே இல்லாத கல்லாகிப் போவேன்
மரணத்தை வெல்ல வழி இல்லையா
நீ சொல்

மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்தது என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன (3)



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link