Theerththa Karaiyiniley

தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே பாவை தெரியுதடி

பாவை தெரியுதடி
தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே

தெற்கு மூலையில்

செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்

அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி
மேனி கொதிக்குதடி
தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம்
இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே



Credits
Writer(s): Bharathiyar, M.s.viswanathan M.s.viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link