Sooravalida

சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு
ஒன்னாக வேட்டு வெடிடா

சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு
ஒன்னாக வேட்டு வெடிடா

புழுதி உடம்போட
ஆடுமடா காலு
எழுதி மாளாது எங்க வரலாறு
வாளெடுத்து வகுடெடுத்து சீவும் சீமைடா
எங்க தெக்குத்திசை காரனுக்கு புல்லும் வாளுடா

நிமிர்ந்து நின்னா கருது
நேர்மையின்னா மருது
நிமிர்ந்து நின்னா கருது
நேர்மையின்னா மருது

சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு
ஒன்னாக வேட்டு வெடிடா

காட்டுப் பனைமரமா
கருப்பா உடம்பிருக்கும்
ஆனாலும் எங்க மனம்
வெள்ள வெள்ள

மூட்டை முதுகிலதான்
நிதமும் சுமந்திடுவோம்
ஆனாலும் பாரம்
எங்க நெஞ்சில் இல்லை

காய்ச்சி போன எங்க
கையிலதான் ரேகை இல்ல
ஆனாலும் கவலையில்லை
நாங்க நெத்தியில
பூசுகிற மண்ணைவிட
திருநீறு ஒசந்ததில்ல

தலைமேல கனத்தத்தான்
ஏத்திவைப்போம்
ஆனா தலைக்குள்ள
கனத்தத்தான் ஏத்தமாட்டோம்

நிமிர்ந்து நின்னா கருது
நேர்மையின்னா மருது
நிமிர்ந்து நின்னா கருது
நேர்மையின்னா மருது

சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு
ஒன்னாக வேட்டு வெடிடா

ஜல்லிக்கட்டு காளை
இது தாக்குமடி ஆள
வெட்டி வம்பு செஞ்சா
இவன் கட்ட வைப்பான் சேலை

மத்தாப்பூ பூப்போல
பொங்கி சிரிப்பானே
கித்தாப்பூ காட்டாம
கொட்டி கொடுப்பானே

நனைஞ்ச பனைபோல வளத்திதான்
நல்ல மனசு மலைபோல ஒசத்திதான்

சட்டையில அழுக்கிருக்கும்
சவுடாலு நிறைஞ்சிருக்கும்
ஆனாலும் நாங்க
ரொம்ப கெத்து கெத்து

வேர்வை வெளிச்சத்துல
இருட்ட துரத்திடுவோம்
மாறாத அன்பு
எங்க சொத்து சொத்து
சும்மா சண்டித்தனம்
பண்ணிவரும் சல்லிப்பையன்
குதிகாலு நரம்பெடுப்போம்

ஊரு பொண்ணுங்கள
கேவலமா சொன்னவன
பொலி போட்டு வகுந்துருவோம்
ஆதாரம் அம்மான்னு
ஆசை வைப்போம்
அவ காப்பாத்தும் சாமின்னு
பூசை வைப்போம்

நிமிர்ந்து நின்னா கருது
நேர்மையின்னா மருது
நிமிர்ந்து நின்னா கருது
நேர்மையின்னா மருது

நிமிர்ந்து நின்னா கருது
கருது கருது
நேர்மையின்னா மருது
மருது மருது
நிமிர்ந்து நின்னா கருது
நேர்மையின்னா மருது

சூறாவளிடா



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link