Mounam Paesum (From "Amarakaaviyam")

மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே

பிரிவென்று ஏதும் இல்லை
உயிர் என்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே
மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயே

ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் பேசுதே
காலமே கைகொண்டு
காதல் காதல் எந்நாளும் நீள
இனிதான வாழ்வில் சேர
ஒஹ் ஒரு நூறு ஆயுள் வாழ

மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே

அலைகள் போலவே
காதல் மோதுமே
சேருமா ஊர் கரை
மோதும் மோதும் ஓயாமல் மோதும்
ஓர் நாளும் சேர்ந்தே தீரும்
ஒஹ் நாளும் வந்தே சேரும்

ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நாளும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பிரிவென்று யெதும் இல்லை
உயிர் என்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே
மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாய்யே

ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்



Credits
Writer(s): P. Vetriselvan, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link