Kadavul Amaithu Vaitha

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை

நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே

ஆண்கிளி இரண்டுண்டு
பெண்கிளி இரண்டுண்டு
அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண் கிளி
அதனிடம் ஆண்கிளி
இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே ஆருயிரே என் அத்தான்

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

கொட்டும் முழக்கங்கள்
கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா
கொட்டும் முழக்கங்கள்
கல்யாண மேளங்கள்
கொண்டாட்டம் கேட்டதம்மா

ஆசை விமானத்தில்
ஆனந்த வேகத்தில்
சீர் கொண்டு வந்ததம்மா
Singapore airlines announced arrival of flight SQ 583

தேன் மொழி மங்கையர்
யாழிசை மீட்டிட
ஊர்கோலம் போனதம்மா
சிங்கார காலோடு
சங்கீத தண்டைகள்
சந்தோஷம் பாடுதம்மா

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
கன்றோடு பசு வந்து
கல்யாணப் பெண் பார்த்து
வாழ்த்தொன்று கூறுதம்மா

Convent-டுப் பிள்ளைகள்
போல் வந்த முயல்கள்
ஆங்கிலம் பாடுதம்மா

Wish you both a happy life
Happy happy married life

பண்பான வேதத்தை
கொண்டாடும் மான்கள்
மந்திரம் ஓதுதம்மா

மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்

பண்பான வேதத்தை
கொண்டாடும் மான்கள்
மந்திரம் ஓதுதம்மா
பல்லாக்கு தூக்கிடும்
பரிவட்ட யானைகள்
பல்லாண்டு பாடுதம்மா

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை

ஒரு கிளி கையோடு
ஒரு கிளி கைசேர்த்து
உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை
உறவுக்குக் கொடுத்திட்ட
ஒரு கிளி ஒதுங்குதம்மா

அப்பாவி ஆண் கிளி
தப்பாக நினைத்தது
அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல
கிணற்றுத் தவளை தான்
இப்போது தெரிந்ததம்மா

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை



Credits
Writer(s): Kannadhasan, M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link