Kaathadicha

காத்தடிச்சா நோகுமுன்னு
பொத்திப்பொத்தி வளர்த்தீக
கருப்பசாமி கண்ணக்குத்துமுன்னு
சோறூட்டி வளர்த்தீக

ஊருக்கண்ணு பட்டுருமுன்னு
சுத்திச்சுத்திப் போட்டீக
கையாலாகாத பிள்ளையப் பெத்து
கண்ணீர விட்டீக

அடுத்த ஒரு ஜென்மத்துல நீங்க
என் புள்ளையாப் பொறக்கணும்
உங்கக்கிட்டப் பட்ட கடன
நான் வந்து அடைக்கணும்

அடுத்த ஒரு ஜென்மத்துல நீங்க
என் புள்ளையாப் பொறக்கணும்
உங்கக்கிட்டப் பட்ட கடன
நான் வந்து அடைக்கணும்

நான் பொறந்த சேதியத்தான்
ஊரக்கூட்டி சொன்னீக
காதுக்குத்துனா வலிக்குமுன்னு
கண்ணு ரெண்ட மூடுனீக

கரிக்கொழம்பு புடிக்கும்முன்னு
கடன் வாங்கி செஞ்சீக
கடங்காரனாப் பொறந்த என்னப்
பார்த்துப் பார்த்து நொந்தீக

அடுத்த ஒரு ஜென்மத்துல நீங்க
என் புள்ளையாப் பொறக்கணும்
உங்கக்கிட்டப் பட்ட கடன
நான் வந்து அடைக்கணும்

அடுத்த ஒரு ஜென்மத்துல நீங்க
என் புள்ளையாப் பொறக்கணும்
உங்கக்கிட்டப் பட்ட கடன
நான் வந்து அடைக்கணும்



Credits
Writer(s): Kavi Periyathambi, Rasumadhuravan
Lyrics powered by www.musixmatch.com

Link