Putham Pudhu

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே

வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையை தான்
கண்ணீரும் சொன்னதோ

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே

பால் நிலா தேய்கின்ற தென்று
பகல் இரவும் என் நெஞ்சம்
பழிவிழுமோ என்றஞ்சும்

ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்

கருணைக் கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற
பார்வை கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற
உயிரென நான் கலந்தேன்...

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே

வாழ்வெனும் கோலங்கள் இன்று
வரைந்தது உன் பொன் உள்ளம்
நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்

ஈட்டிசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்

கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட
தோகை உன்னை நான் தான்
தோளில் இன்று வாங்க
உனக்கென நான் பிறந்தேன்...

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே

வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையை தான்
கண்ணீரும் சொன்னதோ

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே



Credits
Writer(s): Valee, Ilayaraja
Lyrics powered by www.musixmatch.com

Link