Edhai Ninaithom

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்
எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே
ஆசையைத் தான் வென்றவன் இல்லையே
அதை இன்று தான் உணர்ந்ததென் பிள்ளையே

புதுப் புது ஏக்கம் அளித்திடும்
தினம் தினம் தூக்கம் கெடுத்திடும்
மனதினை திறந்து வைக்கையில்
இருப்பதை நெஞ்சம் ரசித்திடும்

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசையில் ஏறி மேகத்தில் போனோம்
குயில் முட்டை மேலே காக்கைகள் ஆனோம்

புல் நுனி மீதே தூங்கிடும் பனியை ரசித்தால்
மின்னலின் ஒளியின் மீது கொண்ட மயக்கம் விலகிடுமே
கிடைத்ததை எண்ணி வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால்
ஜன்னலின் கதவைத் தீண்டி புதிய வெளிச்சம் வீசிடுமே

எதை நினைத்தோம் அதை அடைந்தோம்
அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே
ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே



Credits
Writer(s): G V Prakash Kumar, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link