Aagaayam

ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்

ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க
அழகான காரணமே காதல்தான்

பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்

மரம் ஏற ஏணியைத்தந்தால் மலையில் ஏறி கொடியேற்றும்
குண்டூசி கையில் தந்தால் கிணறே தோண்டி விடும்
வெறும் கல்லை வைரக்கல்லாய் காதல் பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட காதல் மீன் நீந்தும்

கஷ்டம் காதலுக்கு இஸ்டம்
வெற்றி பெற வேண்டும் என்றால் காதல் எதையும் தாங்கிடுமே
முட்டும் கதவுகளை தட்டும்
சறுக்கி விழும் பாதை எல்லாம் வெற்றி படியாய் மாற்றிடுமே

அண்ணாந்து பார்க்காமல் விண்மீனை வீழ்த்திவிடும்
துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே

இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே
இருமனம் விரும்பி துணிந்து நுழையுமே
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே

வேரோடு வேர்வை ஊற்றி காதல் என்றும் வென்று விடும்
வெறியோடு ஓடும் போது தடையை உடைத்து விடும்
கடல் நீரை தேக்கும் போது உப்பாய் தானே மாறிவிடும்
கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாற்றிவிடும்

காதல் கேட்டுக் கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா
காதல் காட்டுச் செடி போலே
கட்டளைகள் போடும் போதும் பூக்கள் பூக்க மறுத்திடுமா

புலி வாழும் குகையுள்ளே கிளி வாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே காதல் தான்

இது போகும் வழியோ வெற்றுப்பாதை
திரும்பும் வழியோ வெற்றிப்பாதை
விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது

மலையேறும் எறும்பின் கால்கள் வெயிலை மிதித்து உடையாது
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது



Credits
Writer(s): Na. Muthukumar, Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link