Muthumani Maalai - From "Chinna Gounder"

முத்து மணி மால
உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்துல சேல
கொஞ்சம் விட்டு விட்டு போராட

உள்ளத்தில நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

முத்து மணி மால
உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட

பழசு தான் மௌனம் ஆகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவ மூடுமா
மௌசு தான் கொறையுமா

நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு
காசிப் பட்டு தந்த ராசாவே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

தாழம் பூவுல வீசும் காத்துல
பாசம் தேடி மாமா வா

முத்து மணி மால
என்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்துல சேல
கொஞ்சம் விட்டு விட்டு போராட

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

நெத்தி சுட்டி ஆடும் உச்சன் தலையில்
பொட்டு வச்சது யாரு நான் தானே
அத்தி மரப் பூவும் அச்சப்படுமா
பக்கத் துணை யாரு நீ தானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

முத்து மணி மால
என்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்துல சேல
கொஞ்சம் விட்டு விட்டு போராட

உள்ளத்தில நீ தானே
உத்தமரும் நீ தானே
இது நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே



Credits
Writer(s): Ilaiyaraaja, R. V. Udhavakumar
Lyrics powered by www.musixmatch.com

Link