Kannaal Modhadhey

கண்ணால் மோதாதே அழகியே
நான் சொன்னால் தீராதே
உன்னால் கூழாக உருகவே
என் நெஞ்சே ஆறாதே

கனவின் விதை நட்டிட்டாய் கவிதைகளை கற்பித்தாய்
முகமும் அகமும் ஒன்றிங்கே நீ என் உள்ளே வீசும் சாரலே
இசை ஒப்பித்தாய் இளமைகளை கொட்டிடாய்
பசியும் ருசியும் ஒட்டி தான் காதலிலே நானும் பாதித்தேன்

ரதியே மதியே ஒளியே
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே
சஞ்சனா சகியே உயிரே இதமே
உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே

பாென் ஆடை போலே உடலிலே
அடி என் தோளில் நீயே

சிறகும் விரிய வந்தாய் உறவில் உதயம் தந்தாய்
தனியே தனிமை கொன்றிங்கே தாகம் தந்தே யோகம் போதித்தாய்
அசையும் அழகை கண்டேன் அறிவின் வளமை கண்டேன்
துணிவின் வலிமை கொண்டிங்கே தோற்கின்றேனே மீண்டும் மீண்டும் தான்

ரதியே மதியே ஒளியே
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே
சஞ்சனா சகியே உயிரே இதமே
உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே

ஆறடி நிலமே நான் தான் மானிட மழையே
வா வா வானிடம் வரவா தீயால் ஆவி ஆகிறேன்
நாள் தோறும் தாலாட்ட காதருகே பாராட்ட
மோகத்தில் சீராட்ட மாறாமல் நீ வேண்டும்
மாயத்தில் மாய்ந்தேனே மல மலவென தேய்ந்தேனே
ஒரு முத்தம் கேட்டேனே அதை பெற்றால் வாழ்வேன் நானே

கிளியே ரதியே மதியே ஒளியே
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே
சஞ்சனா சகியே உயிரே இதமே
உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே

கண்ணால் மோதாதே அழகியே
நான் சொன்னால் தீராதே
உன்னால் கூழாக உருகவே
என் நெஞ்சே ஆறாதே

இசை ஒப்பித்தாய் இளமைகளை கொட்டிடாய்
பசியும் ருசியும் ஒட்டி தான் காதலிலே நானும் பாதித்தேன்

ரதியே மதியே ஒளியே
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே
சஞ்சனா சகியே உயிரே இதமே
உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே

அழகே, அழகே
அமுதே, அமுதே
சகியே, சகியே



Credits
Writer(s): Santhosh Narayanan, R Muthamil Selvan
Lyrics powered by www.musixmatch.com

Link