Naanaga Naan Iruthen

நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்

நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே

கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை உரசும் சேலையாக மூடவந்தேன்
சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ
ஆலமரம் போலவெய் இருந்தேன் அடி
ஒரு வாழை மரம் சாய்ந்ததால் வளைந்தேன் அடி

நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே

ஒரு யாசகம் கேட்டு
உந்தன் வாசல்வந்து காத்து நின்றேன்
சிறு பார்வையே பாத்து
என்னை சேர்த்து கொள்வாயோ

குருத்து ஓலையாய் நானும்
உந்தன் வாசல் வந்து ஊஞ்சல் ஆட
மா இலை என வந்து
நீ சேர்த்து கொள்வாயோ

தூரிகை உதடு நீதான்
காகிதம் கன்னம் நாந்தான்
இரவும் பகலும் எழுதுதேன் டா

வானத்தை பார்க்கும் பூ நீ
பூமியில் வாழும் வேர் நான்
வேரும் பூவும் வேறு இல்லை

கிணற்றில் தண்ணீர் எடுகையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ

நிற்க்கும் பொது கேட்டகின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நடக்கும் பொது கேட்க்கின்ற
கொலுசு ஓசை நான்

ஒரு வாலிப சிங்கம்
அதன் காட்டுக்கு உள்ளே ஓடி வந்து
சிறு புன்னகை செய்தாய்
நான் பூனை ஆனேனே

ஒரு தாமரை பூ நான்
அதில் உள்ள இதழ் அத்தனையும்
உன் பேரை இனி பேசும்
அந்த ஓசை கேட்டையோ

சத்தங்கள் கூட இன்று
சங்கீதம் ஆகும் அடி
வாலை ஓசை சொன்னேனே

ஏழு வண்ண வானவில்
மண் மீது வாழுதடா
உந்தன் கையின் ரேகை சொன்னேனே

நிற்க்கும் பொது கேட்டகின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நடக்கும் பொது கேட்க்கின்ற
கொலுசு ஓசை நான்

கிணற்றில் தண்ணீர் எடுகையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ

நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே

கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை
உரசும் சேலையாக மூடவந்தேன்

சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ
ஆலமரம் போலவெய் இருந்தேன் அடி
ஒரு வாழை மரம் சாய்ந்ததால் வளைந்தேன் அடி



Credits
Writer(s): Mani Sharma, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link