Mazhai Varum - Male

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே இன்று உனை தேடி தேடி பார்க்கிறது

உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

அறியாத வயதில் விதைத்தது ஓ ஓ ஓ ...
அதுவாகவே தானே வளர்ந்தது ஓஓஓ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓ ஓ ஓ ...
அட யாரது யாரது பறித்தது?
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்தடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓ ஓ ஓ.
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்? ஓஓஓ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓ ஓ ஓ...
யார் தந்தது வழிகளில் காயங்கள்? ஓஓஓ
இந்தக் காதலும் ஒரு வகை சித்ரவதைதானே
அது உயிருடன் எரிக்குதடா

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே இன்று உனை தேடி தேடி பார்க்கிறது

உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?



Credits
Writer(s): Na. Muthukumar, Joshua Sridhar
Lyrics powered by www.musixmatch.com

Link