Malarodu Malaringu (From "Bombay")

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்
மலரோடு மலர் இங்கு...
துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு வின் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்



Credits
Writer(s): A. R. Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link