Thaayai Thedi

தாயை தேடி வாசல் பாத்து
நானும் வரும் இந்த நேரம்
என்னை நீயும் யாரோ என்றே
பார்த்திடாதே அது சாபம்

உறக்கமே இல்ல கண்ணிலே
நான் கெடக்கணும் உன் அன்பிலே
என் ஜீவன் வாழும்

உயிர உணவாக்கி
எனக்கு நீ ஊட்ட
வாசல் தாண்டி தெருவிலும்
எங்கும் தேடி தான்
நானும் இல்லாம போனேனே

நெனச்சு அழுதியா
நெஞ்சொடுதான் நெறய
நான் தந்தேனே வழிய

இன்னோர் வாய்ப்பு தான்
தந்தால் நானும் தான்
வாழ்வேன் நாளும் நல்ல
மகனாய் உனக்கே

உதருதே எந்தன் கால்களும்
அட உணருதா உந்தன் கண்களும்
என் சொந்த தாயே

நானும் போன பாத கல்லும் முள்ளுமா
அட இருட்டும் திருட்டுமா
ஒரு வெட்ட வெளியில் பட்ட மரமா
மக்கி போனெம்மா

நஞ்சாகி நின்ரேம்மா நாறிய பூவம்மா
அலைகடலில் தொலஞ்ச உடல போல
ஒதுங்கி போனெம்மா

பாரமே அது குறஞ்சாதே
தாய் பார்க்கவே வரம் கெடைச்சதே
என் ஜீவன் வாழும்



Credits
Writer(s): B. Ajaneesh Loknath, Velmurugan
Lyrics powered by www.musixmatch.com

Link