Seramal Ponal

மழைப் பொழிந்திடும் நேரம்
ஒரு குடையினில் நாமும்
நடப்பதை எதிர் காணும்
கனவுகள் பிழையா?

வரம் ஒன்றுக் கொடு போதும்
கலவரங்களும் தீரும்
தனி மரம் என நானும்
இருப்பது முறையா?

என் தாரகை...
நீ தானடி
கண் விழியால்
கொல்லாதடி
தள்ளாதடி
கை விரலால்

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
பெண் பூவே...

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
பெண் பூவே...

நடு வெயிலில்
கடல் கரையில்
படகடியில்
இணைந்திடவா
நடு இரவில்
அடை மழையில்
சாலை வழியில்
இணைந்திடவா

ஜன்னல் வழியில்
மின்னல் புகுந்த
நொடிகளிலும்
இணைந்திடவா
கட்டில் அறையில்
காலை வரையில்
போர்வை சிறையில்
இணைந்திடவா

நீ இன்றி நானும்
நான் இன்றி நீயும்
வாழும் வாழ்க்கை என்னடா
அன்பே நீயும் சொல்லடா

நீர் இன்றி வானும்
வான் இன்றி நீரும்
இருந்தால் உலகம் ஏதடி
பெண்ணே புரிந்து கொள்ளடி

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
என் அன்பே...

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
என் அன்பே...

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
பெண் பூவே...

சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
பெண் பூவே...



Credits
Writer(s): Ko Sesha, Vivek Mervin
Lyrics powered by www.musixmatch.com

Link