Ae Maanpuru Mangaiyae (From "Guru")

தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியா
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியா
இப்போது எழுதுங்கள் பல்லவியை

யே மாண்புரு மங்கையே
நில்லாய்யோ
செம் மாதுளை வாய் மொழி
சொல்லாயோ

யே மாண்புரு மங்கையே
நில்லாய்யோ
செம் மாதுளை வாய் மொழி
சொல்லாயோ

யே மாண்புரு மங்கையே
யே மாண்புரு மங்கையே
யே மாண்புரு மங்கையே

தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியா
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏன் கலி தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலி தோகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை தமிழை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ

கண்கள் பார்த்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டுவேன்
உன் இதழ் மேலே எழுதுவேன்

யே மாண்புரு மன்னவா
நில்லாய்யோ
என் பாமர வார்த்தையில்
சொல்லாயோ
யே மாண்புரு மன்னவா
யே மாண்புரு மன்னவா
யே மாண்புரு மன்னவா

தம்தன தம்தன தம்தே தும்தா
தம்தன தம்தே தும்தா தும்தன
தம்தன தம்தன தும்தன தம்தே
தம்தன தும்தே தம்தே தும்தா

உன் வாட்டங்கள் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்க்கையில் தேவை தீ பாவை

உந்தன் சேவை இவள் செய்யும் போது
உந்தன் சேவை இவள் செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே

யே யே மாண்புரு மங்கையே
நில்லாய்யோ
செம் மாதுளை வாய் மொழி
சொல்லாயோ

யே மாண்புரு மன்னவா
நில்லாய்யோ
என் பாமர வார்த்தையில்
சொல்லாயோ

யே மாண்புரு மன்னவா
யே மாண்புரு மங்கையே
யே மாண்புரு மன்னவா

தம்தன தம்தன (கண்கள் சொந்தம் சொல்ல)
தம்தன தம்தன (கண்கள் சொந்தம் சொல்ல)
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
தம்தன தம்தன கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை



Credits
Writer(s): R Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link