Ennullil Engo

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது

என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில் ஆ
பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலில்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க
காலம் இன்றே சேராதோ

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது

மஞ்சளைப் பூசிய மேகங்களே
மேகங்களே மோகங்களே
மல்லிகை மாலைகளே ஆ
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து காளைகளே
சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link