Evano Oruvan

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறேன்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன்
ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது
எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பெரிதில்லையே
அந்தக் குழலைப்போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்



Credits
Writer(s): R Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link