Vizhiyile Malarntha Thi

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே, தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல் ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி, கற்பனைக்கு ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி, காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

கைய்யளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கைய்யளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி, பின்னழகில் மோகினி
மோகமழை தூவும் மேகமே, யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே



Credits
Writer(s): P Arunachalam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link