Kathalikkum Penin Kaikal (From "Kaadhalan")

நா நானா
நானா நானா
நா நா நானா

காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே

காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட
புனிதம் ஆகுமே

குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட
தங்கம் தானே

காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட
பவளம் தானே

சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்

காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே

காதல் ஒன்றும்
நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட
ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்ஷி
தேவை இல்லையே
காக்கை கூட
தூது போகுமே

காதல் ஜோடி
குறைவதில்லை
காதல் என்றும்
குற்றமே பார்ப்பதில்லை

இதில் அர்ப்பமானது
எதுவும் இல்லை
இந்த நுட்பம்
ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும்
மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே

ஆதாம் ஏவாள்
பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே

காதல் கெட்ட வார்த்தையா
என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் என்று

காதல் முள்ளின் வேலியா
என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் என்று

நான நானா
நா நானா
நான நானா
நா நா நானா



Credits
Writer(s): A.r. Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link