Urimayai Meetpom

உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும்
நிலம் மட்டுமடா.
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும்
நிலம் மட்டுமடா.

எவனோ வந்து விதச்சான்
அத எவனோ வந்து அறுத்தான்
, ரொம்ப கருத்தா அத வளர்த்தா
இவன் பசியா துடிச்சான்.
முறையா தல முறையா வழி வழியாய்
இன மொழியாய் அட பிரிந்தே கிடந்தவனும்.
இப்போ நிமிர்ந்தான் நிமிர்ந்தான்.
நிலமே எங்கள் உரிமை
நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
நிலமே எங்கள் உரிமை
நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை

இடியாய் ஒரு புயலா வந்து
இரங்கும் நம்ம படையும்
அது தடுத்தா எந்த கரையும்
இனி உடையும் உடையும்.
விதையாய் சின்ன விதையாய்
வந்து விழுந்தோம் சிறு துளியாய்
சதை கிழிந்தே மெல்ல எழுந்தோம்
பெரும் மழையாய் மழையாய்ய்ய்.
புழுதி உடையாய் அணிந்தே வியர்வை நெடியால்
குனிந்தே குருதி வழிய வரைந்தோம் அதுதான் உலகே.
விடியும் விடியும் என்றே இருளில் கிடந்தோம்
இன்றே ஒளியாய் திறந்தோம்
ஒன்றாய் சேர்ந்தே சேர்ந்தே...
நிலமே எங்கள் உரிமை
நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
நிலமே எங்கள் உரிமை
நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும்
நிலம் மட்டுமடா.
நிலமே எங்கள் உரிமை.
ஆளவும் இல்லடா
அடிமையும் நீ இல்லடா
காடெல்லாம் மேடெல்லாம்
முளைத்தது உன் நிலம்டா.
அடங்கி வாழ்ந்தாக்க முடியாதம்மா.
உரிமையை வாங்காம உயிர் போகுமா.
எழுந்து வாடா வாடா.
எதிர்த்து நீ கேளுடா
பயந்தா ஆகதுடா
இன்னமே உன்கூடதான்
நிலத்த மீட்டுக்கலாம்
நிலைமை மாத்திக்கலாம்
ஒன்னாக இருந்தா இனி நம்ம காலம்தான்.
நிலமே எங்கள் உரிமை
நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை

நிலமே எங்கள் உரிமை
நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை

வண்ணங்கள தீட்டு
இது வானவில்லின் கூத்து.
அட சொந்தம் ஏது கேட்டா
அந்த விண்மீன காட்டு.
கதவில்லாத கூட்டில்
கனவுகள் ஏராளம் உண்டு.
உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில்
விடுதலை எப்போதும் உண்டு.
அதிகாரம் தொட்டு நினைப்ப
மாத்திக்காட்டு உழைக்கும் கைகளுக்கே நாடு நாடு.
அடக்கும் காலம் இல்ல
நமக்கும் வேலி இல்ல
வெடித்து போரடலாம் பயமே இல்ல.
நிலமே எங்கள் உரிமை
நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
நிலமே எங்கள் உரிமை
நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும்
நிலம் மட்டுமடா.
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும்
நிலம் மட்டுமடா.
மீட்போம்
மீட்போம்
மீட்போம்
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும்
நிலம் மட்டுமடா.



Credits
Writer(s): Arivu, Santhosh Narayanan Cetlur Rajagopalan
Lyrics powered by www.musixmatch.com

Link