Naan Pesavanthen

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
படபட படபட படவென வரும் பாவங்கள்

ஆலிலை மீது தழுவிடும் காற்று
சலசல சலசல சலவென வரும் கீதங்கள்

குலமகள் நாணம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஹா...

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கலகல கல கலவென வரும் எண்ணங்கள்
ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பளபள பளவென வரும் கிண்ணங்கள்

சொல் என கண்ணும்
நில் என நெஞ்சும்

சொல் என கண்ணும் நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
அதுதான் ஆனந்த எல்லை...

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய்மொழி மணிவாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை



Credits
Writer(s): Kannadhasan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link