Nilave Vaan Nilave

நிலவே வானிலவே வானிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே
ராதை இவள்
வாழ்க்கை என்று கூறு

நிலவே வானிலவே வானிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே
ராதை இவள்
வாழ்க்கை என்று கூறு

பெண் உள்ளம் என்னவென்று
அறியாதவனோ??
பேதை மனம் படும் பாட்டை
புரியாதவனோ
அந்த காற்றும் ஒரு நாள்
என்திசை மாறனும்
கண்ணா என் கண்ணா

நிலவே வானிலவே வானிலவே
வார்த்தை ஒன்று பேசு

மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்
பாலகன் வருவான் தேனோட
ஆண்டாள் நெஞ்சில் தேனோட
அழகர் வந்தாரே நீராட

வானமழை இல்லை என்றால்
வைகை நதி ஏது??
வைகை நதி இல்லையென்றால்
சோலை மலர் ஏது

கண்களை மூடி கொண்டால்
வெளிச்சம் இருக்காது
தீ நடுவில் நீயே
நின்றால் தீர்வு கிடைக்காது

சூரியன் உதிப்பததை நிருத்திகொண்டால்
உலகில் விடிவேது
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்
உயிர்கள் கிடையாது
உடலை தள்ளி உயிர் போனால்
என்ன செய்வது

நிலவே வானிலவே வானிலவே
வார்த்தை ஒன்று பேசு

உன்பேரை எந்தன் மூச்சில்
எழுதி வச்சேன் பாரு
அழிக்கும் நிலை வந்தால்
எனக்கு ஆயுள் இருக்காது

கடலுக்கு ஒரு சொந்தமென்று
கரை இருக்கு பாரு
கன்னிமகள் சொந்தம் கொள்ள
உன்னயன்றி யாரு

இன்னொரு தாயாய் நானும் மாறி
உன்னை தாங்கிடுவேன்
உன்னிழலாக வாழ்ந்திடகோடி
ஜென்மம் வாங்கிடுவேன்
கண்ணன் நடந்த கால் தடமாய்
மண்ணில் வாழ்கிறேன்

நிலவே வானிலவே வானிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே
ராதை இவள்
வாழ்க்கை என்று கூறு

பெண் உள்ளம் என்னவென்று
அறியாதவனோ??
பேதை மனம் படும் பாட்டை
புரியாதவனோ
அந்த காற்றும் ஒரு நாள்
என்திசை மாறனும்
கண்ணா என் கண்ணா



Credits
Writer(s): S. Rajkumar, Illayakamban Illayakamban
Lyrics powered by www.musixmatch.com

Link