Thittam Poda Theriyala

திட்டம் போட தெரியல
பயப்பட புடிக்கல
தீயினு தெரிஞ்சும்
தள்ளி போக முடியல

வேற வழி தெரியல
நல்ல வழி கிடைக்கல
அவளுக்கு ஒண்ணுன்னா தான்
தப்பும் தப்பில்ல

கனவெல்லாம் வரவில்ல
என் கண்ண மூட துணிவில்ல
கடவுளை தொல்லை பண்ணி
கதற தெரியல
எது சரி புரியல
இங்க தப்பு எது தெரியல
வளையுற நெளியுற ஆளா
பொறந்து தொலையுறேன்

வலி தாங்கல அதனால
வேற வழியே இல்ல
வலி தாங்கல அதனால
வேற வழியே இல்ல
வலி தாங்கல
வலி தாங்க இனி தெம்பே இல்ல
அவளுக்கு ஒண்ணுன்னா தான்
தப்பும் தப்பில்ல
உயிர் போகல
அது இருக்கம் வரைக்கும் கவலை இல்ல
உயிர் போகல
அது இருக்கம் வரைக்கும் கவலை இல்ல

உயிர் போகல
அத தவற வேற தேவ இல்ல
வளையுற நெளியுற ஆளா
பொறந்து தொலையுறேன்

யாருமே போகாத
தூரமே தெரியாத
ஒத்தை அடி பாதை
ஒன்னு தேர்ந்தெடுத்தேனே

மூடவே முடியாத
ஆழமும் தெரியாத
குழி ஒன்னில் என்னை நானே
தள்ளி விட்டேனே

எல்லாருக்கும் வானம்
நல்லாருக்கும் போது
எல்லாருக்கும் வானம்
நல்லாருக்கும் போது
நான் பாக்கும்போது மட்டும்
கருத்து போகுதே

மழை கூட வேணாம்
சின்ன தூறல் போதும்
ஏதோ ஒரு வெளிச்சம் தேடி
முழிச்சி இருக்கேனே

வலி தாங்கல
அதனால வேற வழியே இல்ல
வலி தாங்கல அதனால
வேற வழியே இல்ல
வலி தாங்கல வலி தாங்க
இனி தெம்பே இல்ல
அவளுக்கு ஒண்ணுன்னா தான்
தப்பும் தப்பில்ல

உயிர் போகல
அது இருக்கம் வரைக்கும் கவலை இல்ல
உயிர் போகல
அது இருக்கம் வரைக்கும் கவலை இல்ல
உயிர் போகல
அத தவற வேற தேவ இல்ல
வளையுற நெளியுற ஆளா
பொறந்து தொலையுறேன்
திட்டம் போட தெரியல
பயப்பட புடிக்கல
தீயினு தெரிஞ்சும்
தள்ளி போக முடியல

வேற வழி தெரியல
நல்ல வழி கிடைக்கல
அவளுக்கு ஒண்ணுன்னா தான்
தப்பும் தப்பில்ல



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivn
Lyrics powered by www.musixmatch.com

Link