Megathil Ondrai Nindroam

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை
மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை கொண்ட உன் ஆண்மையை காதலித்தேன்
மீசை கொண்ட உன் மென்மயை காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்

கண்ணா சிலநாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்
கடல்நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும்
வெளியூர் போகும் காற்றும் ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும்
பிரிதல் என்பது இளையுதிர்காலம் நிச்சயமம் வசந்தம் வரும்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

அன்பே அன்பே உன்னை எங்கனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் இரவுகள் எறிந்திருப்பேன்
உன்னை என்னி என்னுயிர் தளம் உடைந்திருபேன்
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்தரிப்பேன்

அன்பே அன்பே உன்னை எங்கனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
பெண்னே பெண்னே நம் பிரிவினில் துணையிருப்பேன்
கண்னே கண்னே என் கண்களை அனுப்பிவைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன்
ஏன் தான் அவரை கண்டை என்று கண்களை தண்டிக்கிறேன்
பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்டச்சாலை மீண்டும் சந்திப்போம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை
மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்



Credits
Writer(s): Jasmine Canales, K Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link