Shollathaan Innaikkiren

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
மனதெங்கும் காயங்களாய்

கல்லடிகள் தாங்கிய கள்ளி செடி போலவே
அழுகிறேன் சோகங்களால்
வளர்ந்ததும் வெட்ட ஒரு நகம் அல்ல காதல்
இதய குழல் தானடா
இதயத்தை தூக்கி இந்த கல்யாண நாளில்
பரிசாய் கொடுத்தேனடா
தினம்தோறும் எனை வதைத்த கனவே சென்று வா
கவிதைகள் மட்டும் தா

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
மனதெங்கும் காயங்களாய்

எண்ணி ஈரெட்டு ஆண்டுகள் கழித்து தான்
எந்தன் இமைகள் திருடு போனதே
அதையே மீட்க வந்தேன் இங்கே
வந்த இடத்தில் எனது உயிரும் தான்
கண்கள் அறிய களவு போகுதே
இதை நான் எங்கே சொல்வேன் அன்பே
அகல் விளக்காக மின்னும் அழகான பூவே
சோகங்கள் வேண்டாம் இனி சுகம் தானடி
பல காலம் புவி மேலே நீ மணம் வீசவே
மனதால் நான் வாழ்த்துவேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
மனதெங்கும் காயங்களாய்

(ஆ-ஆ-அ)
(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ)

(லல-லல-லா-லா)
(லல-லல-லா-லா)

தன் கைவிட்டு போகிற பூவினை
எண்ணி காம்புகள் அழுத சோகத்தை
சொல்ல வார்த்தை கிடையாது தான்
கொண்ட காதலி பிரியும் வேளையில்
கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி
மறுத்த கடவுள் சதிகாரன் தான்
மணமகளான என் ப்ரியமான தோழி
நீ உள்ள திசை எண்ணியே நான் வாழ்வேன்
உயிர் தேடும் இளம் பூவே இந்த வைபோகமே
சிலையை தாலாட்ட வா

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
மனதெங்கும் காயங்களாய்

கல்லடிகள் தாங்கிய கள்ளி செடி போலவே
அழுகிறேன் சோகங்களால்
வளர்ந்ததும் வெட்ட ஒரு நகம் அல்ல காதல்
இதய குழல் தானடா
இதயத்தை தூக்கி இந்த கல்யாண நாளில்
பரிசாய் கொடுத்தேனடா
தினந்தோறும் எனை வதைத்த கனவே சென்று வா
கவிதைகள் மட்டும் தா

(லல-லா-லல-லலா)
(லல-லல-லா-லா-லா)
(லல-லா-லல-லலா)
(லல-லல-லா-லா-லா)



Credits
Writer(s): Viveka Viveka, Siva C
Lyrics powered by www.musixmatch.com

Link