Yean

ஏன் ஏதும்
கூறாமல் போனாயோ
ஏன், நேற்றை
பூட்டாமல் போனாயோ

சாம்பலாய் வரம்
எங்கே என் மேகம்
விடுகதையாய் கணம்
கண்ணீரில் போகும் பாதம்

தூரமாய் போனதே
காதலின் கீர்த்தனை
வீழ்ந்திடும் நீரெல்லாம்
தேடுதலின் பிரார்த்தனை

ஊரை தாண்டி
போனான் என்றே
அங்கும் இங்கும்
கண் தேடும்

வேரை தாண்டி
போனான் என்ற
உண்மை உள்ளே பந்தாடும்

தீர்ந்ததே கணம்
எங்கே உன் வானம்
தடையெனவே வரும்
கண்ணீரின் தீரா பாரம்

வேகுதே நாளை
எங்கே உன் பாதை
சிறகுகளாய் பாறை
தரையினில்
சாகும் நாளை



Credits
Writer(s): Govind Vasantha, Karthik Netha
Lyrics powered by www.musixmatch.com

Link