Poonkuyile

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
தொட்டு தொட்டு விலக்கி வச்ச வெங்கலத்து செம்பு அத
தொட்டெடுத்து தலையில் வச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கிளருதடி என்ன படு ஜோரு
கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனச தொட்டு பறிச்சா
தன்னந்தனிய எண்ணி ரசிச்சா
கண்ணு வலை தான் விட்டு விரிச்சா
ஏரேடுத்து பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரேடுத்து வாரேன் யம்மா சேர்த்து என்னை சேர்த்து
முத்தையன் படிக்கும் முத்திரை கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லனும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி முகத்த விட்டு வேறேதையும் தெரிய
வங்கத்துல விளஞ்ச மஞ்சள் கிழங்கெடுத்து உரசி யம்மா
இங்கும் அங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டு கிளியே
கொஞ்சி கிடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லிதான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்தில வாரேன் யம்மா சாமந்தி பூ தாரேன்
கோவப்பட்டு பாத்த யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சு பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு



Credits
Writer(s): Tanjai Jp, Rasi Mani Vasakan
Lyrics powered by www.musixmatch.com

Link