Oru Jeevanthan -Sad

ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஆண்: ஸ்டுபிட் எவன் சொன்னான் ஹூ செட் இட் ஐ சே
பாசமாவது பந்தமாவது ஆல் நான்சென்ஸ் ஐ சே ஹஹஹஹா
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
குழு: {ஹா... ஆஅ... ஆஅ... ஆஅ... ஆ ஆஅ... ஆஅ... ஆஅ...} (2)
ஆண்: கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இருகோடுகள் ஹா ஹா ஹா ஹா
சேர்ந்தாலும் ஹா... சில நாளில் கரைகின்ற மணல் வீடுகள்
ஆண்: கட்டில் சொந்தம் என்னை கை விட்டது
தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியில் தவழும் நிலவே
ஆண்: ஹா... உங்கம்மா என்ன விலை கொடுத்து வாங்க நினைச்சா
நான் யாருக்கும் அடிமை இல்லை
இட்ஸ் இம்பாஸிபிள் ஐ சே... ஹாஹாஹா
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
ஆண்: தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது ஹா ஹஹஹா
பொருந்தாத இரு நெஞ்சை மணவாழ்வில் இணைக்கின்றது
ஆண்: கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம்தான்
மணிமாளிகை உன் வீடுதான் மாஞ்சோலையில் என் கூடுதான்
மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி
ஆண்: நான் குடிப்பேன் கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா ஹஹஹஹா
குடிச்சிட்டே இருப்பேன்bஎன்ன கேட்கறதுக்கு யார் இருக்கா ஹா
ஹஹஹஹா
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது ஹா ஹா... ஆ...
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாததுஹ ஹஹஹஹா



Credits
Writer(s): Valee, Vijayananda
Lyrics powered by www.musixmatch.com

Link