Vidhi Nadhiyae - Reprise

ஆறாய் மனம் ஆறாய் மனம்
முடிவிலி ஆறாகவே பாயும்
உந்தன் அலைகளின் மேலே
ஓர் எதிர் ஒளி போலே நான்

ஆறாய் மனம் ஆறாய் மனம்
விரைந்திடும் ஆறாகவே நீளும்
அதன் கரைகளின் மேலே
கால் தடங்களை போலே நீ...

இதழ் மேலே அணியும் புன்னகையும்
விழியுள்ளே புதையும் கண்ணீரும்
மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு
முன்னே செல்கின்றேன்

நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே

நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே

எனக்காய் சில பூக்கள்
பிறக்காதா திறக்காதா
எனக்காய் சில தூறல்
மலர்வாயா வின் கிளையே

சில ஆசைகளை நிறைவேற்றித்தான்
பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய்
ஒரு நாள் வீழ மறு நாள் மீள
என் நெஞ்சுக்கு சொல்லித்தந்தாய்

நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே

நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்

நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே
என் விதி நதியே



Credits
Writer(s): Arun Raj, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link