Uthattora Sivappe

உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
நீ சிரிச்சலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்

என் செவ்வாழை தண்டே... ஏ... ஏ
என் செவ்வாழை தண்டே சிறுகாட்டு வண்டே
உன்ன நெனச்சு தான் இசை பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு

ஏன் மம்முத அம்புக்கு ஏன் இன்னும் தாமசம்... ஆ... ஆ
அடி ஏ அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம்... ஆ
ஹே மல்லுவேட்டி மாமா மனசிருந்த மார்க்கம் இருக்குது
என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது
ஏன் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி... ஆ... ஆ
அட ஏன் வேட்டிக்கி அவுந்து விடும் யோகம் இன்னிக்கி... ஆ

முருகமலை காட்டுகுள்ள விறகெடுக்கும் வேளையிலே
தூரத்துல நின்னவளே தூக்கி விட்டாலாகாதா
பட்ட விறகு தூக்கிவிட்டா கட்டை விரலு பட்டுபுட்ட
விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா

நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா
நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம் இருக்கா
உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துத... ஆ... ஆ
அட உன் கிறுகுல எனக்கு இந்த பூமி சுத்துது

ம்ம் ம்ம் ம்ம்... ஆ... ஆ
ம்ம் ம்ம் ம்ம்... ம்ம்ம்ம்... ஆ... ஆ

ம்ம் ம்ம் ம்ம்... ஆ
ம்ம் ம்ம் ம்ம்... ஆ

சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும்
பொட்டுகன்னி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும்
உம்ம நெனச்சு பூசையிலே வேப்பெண்ணையும் நெய் மனக்கும்
நீ குளிச்ச ஓடையிலே நான் குளிச்ச பூ மனக்கும்

ஹே வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குறே
என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குறே
அடி என் நெஞ்சிலே ஏண்டியம்மா வட்டி வைக்கிற
உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிற... ஆஆ



Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link